தங்கள் தயவால் தாஹாவே
தங்கள் தயவால் தாஹாவே
தரணி தனினோர் தீனை கண்டோம்
குஃபிரை களைந்தே கலிமா சொன்னோம்
லாயிலாஹ இல்லல்லாஹ்
ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்
மாபிஃ கல்பி கைருல்லாஹ்
நூரே முஹம்மது ஸல்லல்லாஹ்
லாயிலாஹ இல்லலாஹ்
கையில் கல்லை மறைத்தவனாய்
அண்ணலிடம் அபு ஜஹ்ல் வந்தான்
உண்மை நபியாக நீர் இருந்தால்
கையுல் மறைந்ததை பகரும் என்றான்
இறைவனின் மேன்மை இறங்கியதே
உத்தம நபியின் உத்தரவால்
கையில் கற்கள் உரைத்ததுவே
லாயிலாஹ இல்லலாஹ்
(ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்)
தூயர் நீங்களன்றோ
தூயர் நீங்களன்றோ... பாவி நாங்களன்றோ...
தூயர் நீங்களன்றோ... பாவி நாங்களன்றோ...
நீங்கள் ஸாஹே ஹரம்
நான் ஃபகீரே அஜம்
நீங்கள் உயர்வின் குணம்
நாங்கள் தாழ்ந்த இனம்
நீங்கள் இறையின் கொடை...
(தூயர் நீங்களன்றோ...)
இல்ஹாமை உடையாய் அணிந்தவர்
குர்ஆனின் கருவாய் அமைந்தவர்
உங்கள் சிம்மாசனம் அர்ஷே அழீம்...
யா ரஹ்மத்தன் லில்ஆலமீன்...
(தூயர் நீங்களன்றோ...)
யாரஸூலல்லாஹ் அழைப்பீர் யாரஸூலல்லாஹ்
யாரஸூலல்லாஹ் அழைப்பீர் யாரஸூலல்லாஹ்
யாரஸூலல்லாஹ் அழைப்பீர் யாரஸூலல்லாஹ்
யாரெல்லாம் நம் நபியின் காதலில் கரைவாரோ
அவர் மேல் காத்தம் நபியும் கருணை சொறிவார்கள்
யாரஸூலல்லாஹ் அழைப்பீர் யாரஸூலல்லாஹ்
யாரஸூலல்லாஹ் அழைப்பீர் யாரஸூலல்லாஹ்
காதலரை ஏங்க வைக்கும் வழிமுறை
எழில் நபியின் ஏற்றமிகும் நடைமுறை
(யாரெல்லாம்)
நித்தியநபியின் நேசத்தில் உயிரை நீத்தவர்
நிச்சயம் நித்தியமான வாழ்வு பெற்றவர்
(யாரெல்லாம்)
அண்ணல் நபியின் அடிமை யாரோ அவர்தமக்கே
அகிலம் அனைத்தும் அண்ணலரின் அன்பளிப்பே
(யாரெல்லாம்)
நீதரின் நினைவு சிந்தையிலே சிறகடித்தால்
அர்ஷின் அளவில் மகிழ்ச்சியில் நானும் பறந்திடுவேன்
(யாரெல்லாம்)
பார்வையில் நான் பார்த்திபரை பார்த்துவிட்டால்
பதியினில் யாரையும் பார்ப்பதற்கே தேவையில்லை
(யாரெல்லாம்)
ஒளிமயமான வாழ்வும் தங்கள் ஈகையால்
உங்கள் உணவை உண்டே உங்களை புகழ்கின்றோம்
(யாரெல்லாம்)